சோளம் (இலங்கையில் 'இறுங்கு') என்பது புல்வகையைச் சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரப் பேரினம் (genus) ஆகும். இவற்றுட் சில தானியங்களுக்காகவும் வேறு சில கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன. சில வகைகள் மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளர்கின்றன. இப்பயிர் உலகம் முழுதும் மிதமான வெப்பம் கொண்ட பகுதிகளில் பயிராகின்றன. இவ்வினங்கள், எல்லாக் கண்டங்களையும் சேர்ந்த வெப்ப வலய மற்றும் குறை வெப்பவலயப் பகுதிகளையும், தென்மேற்கு பசிபிக், ஆஸ்திரலேசியா பகுதிகளையும் தாயகமாகக் கொண்டவை ஆகும். இது சிறிய தானியப் பயிராகும்.[1]
இந்திய மாநிலமான தமிழகத்தில் பொங்கல் திருநாளன்று வெண்சாமரச் சோளம் பயன்படுத்தப்படும். இன்றும் இது திருச்சிமாவட்டம், பெரம்பலூர் மாவட்ட கிராமங்களில் வெகு சிலரால் பயிரிடப்படுகிறது. இது நாட்டுவகைச் சோளம். பெரும்பாலோர் கலப்பின ரகச் சோளங்களையே பயிரிடுகின்றனர்.
இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. முழுமையான மற்றும் உடைத்த சோளம் வேகவைத்து அரிசி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. முழுச்சோளத்தை அரைத்து அம் மாவிலிருந்து சப்பாத்தி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. சோளமானது நொதித்தல் தொழிற்சாலை மற்றும் எரிசாராயம் மற்றும் கரைப்பான் தொழிற்சாலைகளில் மாவுச்சத்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
வெள்ளைச் சோளம் அரிசியைப் போன்ற தன்மையையும் அதைவிடப் பல சத்துக்களையும் கொண்ட உணவுப் பொருள் ஆகும். சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம், கொழுப்பு, மற்றும் நார் சத்துக்கள் அடங்கி உள்ளன. . இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை.
பச்சையாக உள்ள நூறு கிராம் சோளத்தில் உள்ள கனிம அளவுகள்,
பச்சையாக உள்ள நூறு கிராம் சோளத்தில் உள்ள விட்டமின்களின் அளவுகள், - 2.00 மிகி வைட்டமின் ஏ (ரெட்டினால் அல்லது கரோட்டின்), - 0.06 மிகி வைட்டமின் பி 1 (thiamin, தையமின்) (சோளம், - 0.08 மிகி வைட்டமின் B2 அல்லது ரிபோப்லாவின் (சோளம், - 0.20 மிகி வைட்டமின் B6 அல்லது பைரிடாக்சின், - 18.00 வைட்டமின் சி அல்லது அஸ்கார்பிக் அமிலம் மிகி, - 0.00 மிகி வைட்டமின் ஈ அல்லது தொக்கோபெரோல்.
இவ்வகை சோளம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உணவாகப் பயன்படுகின்றது. இது பெரும்பாலும் தென் ஆப்ரிக்காவில் விளைவிக்கப்படுகின்றது. தற்போது இது மழை குறைவாக பொழியும் அனைத்து நாடுகளிலும் விளைவிக்கப்படுகின்றது. இது நான்கு மீட்டர் உயரம் வரை வளரும். இப்பயிர் மூன்று முதல் நான்கு மில்லி மீட்டர் வரை சுற்றளவு கொண்டிருக்கும். இதன் இலைகள் மருந்து, மற்றும் எத்தனால் தயாரிக்கப் பயன்படுகிறது.
சோளம் அனைத்து பகுதிகளிலும் விளைய ஏற்ற பயிராகும். சிறு வெள்ளைச்சோளமே இந்தியாவினுடைய இயற்கைச் சோளமாகும். மக்காச் சோளத்தின் உற்பத்தியில் தற்போது இந்தியா உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ள நாடு ஆகும்[2]. மக்காச்சோளம் தென் அமெரிக்க நாட்டில் இருந்து வந்த பயிர் ஆகும். சிறுசோளமும், மக்காச்சோளமும் இந்தியாவின் பாரம்பரிய பயிராகும்.
2011 ல் சோளத்தின் உற்பத்தி நைஜீரியாவில் (12.6%), இந்தியாவில் (11.2%), மெக்ஸிகோவில் (11.2%) மற்றும் அமெரிக்காவில் (10.0%) ஆக இருந்தது. சோளம் ஒரு பரவலான வெப்பநிலையில், அதிக உயரத்தில் வளரும். நச்சு மண்களிலும் வளர்க்க முடியும். இது மிகவும் வறட்சியில் வளரும் பயிராகும். இது பசிபிக் பகுதிகளிலும் விளையக்கூடியது ஆகும்.
சோளம் அமெரிக்காவில் மற்ற தானியங்களைவிட அதிக அளவு உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் அதிக அளவு மாவுச்சத்து, கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்து உள்ளதால் சத்தான உணவாக இது கருதப்படுகின்றது. உணவுக்காக மேலைநாடுகளில் அதிக அளவில் இவை பயிரிடப்படுகின்றது. மக்காச்சோள அவல் அதிக அளவு காலை சிற்றுண்டிக்கு பயன்படுகின்றது. வளர்ந்த நாடுகளில் கால்நடை தீவனத்திற்காகவும் சோளம் பயன்படுகின்றன. இது கஞ்சி சர்க்கரை (சோளசர்க்கரை, டெக்ஸரின்) காகன் சிரப் தொழிற் ஆல்கஹால் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது.
ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சொந்தமான சோர்கம் பைக்கலர் (sorghum bicolor)), தற்போது பல பயிரிடப்பட்ட வடிவங்களுடன், உலகளாவிய முக்கிய பயிர் ஆகும்[3], இது உணவுக்காகவும் (தானியமாகவும் சோர்கம் சிரப் அல்லது சோர்கம் மொலாசஸ் வடிவிலும்), விலங்கு தீவனம், மது பானங்கள், மற்றும் உயிரி எரிபொருள்கள் போன்றவை தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலான வகைகள் வறட்சி மற்றும் வெப்பத்தை தாங்கி வளரும் தன்மை கொண்டவையாகும், வறண்ட பகுதிகளிலும், குறிப்பாக ஏழை மற்றும் கிராமப்புற மக்களுக்கான உணவுப்பொருட்களில் ஒன்றாக இது விளங்குகிறது. இந்த வகைகள் பல வெப்ப மண்டலப் பகுதிகளில் மேய்ச்சலின் முக்கிய கூறுகளை உருவாக்குகின்றன. ஆப்பிரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் தெற்கு ஆசியா ஆகியவற்றில் முக்கிய உணவுப் பயிர்கள் எஸ்.பைகோலர் ஆகும், இது உலகின் ஐந்தாவது மிக முக்கியமான தானிய பயிர் ஆகும்[4].
சோளத்தின் சில சிற்றினங்கள் ஆரம்ப வளர்ச்சி நிலைகளில் ஹைட்ரஜன் சயனைடு மற்றும் நைட்ரேட்டுகளின் அளவுகள் இளம் மேய்ச்சல் விலங்ககளுக்கு கொல்லும் அளவிற்கு ஆபத்தை விளைவிக்கின்றன.வறட்சி அல்லது வெப்பத்தால் பாதிக்கப்பட்ட சோளத் தாவரங்களில் சானைட் மற்றும நைட்ரேட்டுகள் காணப்படுகின்றன[5].
சோளத்தின் மற்றொரு வகையான ஜான்சன் புல் (Johnson Grass) சொர்கம் ஹாலப்பென்ஸ் (S. halapense) தாவரத்தை ஆக்கிரமித்தக்கொள்ளும் தாவரமாக இனமாக ஐக்கிய அமரிக்காவின் வேளான்மைத்துறை வகைப்படுத்தியுள்ளது. [6]
சூரிய எரிசக்திக்கு மாற்றாக வேதிய எரிசக்தியை மாற்றியமைப்பதில் சோளம் மிகவும் திறன் பட பங்காற்றுகிறது, மேலும் பிற தானிய பயிர்களை ஒப்பிடும்போது சோளப்பயிர்கள் குறைவான நீரைப் பயன்படுத்துகிறது[7][8]. இனிப்பு சோளத்தின் தண்டுகளில் உள்ள அதிக சர்க்கரை உள்ளடக்கமானது உயிர் எரிபொருளான எத்தனால் உற்பத்திக்கு, கரியமில வாயு, சிங்கஸ் மற்றும் உயிர் எரிபொருள் தயாரிப்பிலும் பெரும் பங்காற்றுகின்றன[9][10].
சோளம் (இலங்கையில் 'இறுங்கு') என்பது புல்வகையைச் சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரப் பேரினம் (genus) ஆகும். இவற்றுட் சில தானியங்களுக்காகவும் வேறு சில கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன. சில வகைகள் மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளர்கின்றன. இப்பயிர் உலகம் முழுதும் மிதமான வெப்பம் கொண்ட பகுதிகளில் பயிராகின்றன. இவ்வினங்கள், எல்லாக் கண்டங்களையும் சேர்ந்த வெப்ப வலய மற்றும் குறை வெப்பவலயப் பகுதிகளையும், தென்மேற்கு பசிபிக், ஆஸ்திரலேசியா பகுதிகளையும் தாயகமாகக் கொண்டவை ஆகும். இது சிறிய தானியப் பயிராகும்.